புது தில்லி: கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம்; ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான் இருக்கின்றனர் என்று அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2005 டிசம்பா் 29-இல் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வாஜ்பாய் அறிவித்தாா். அப்போது, ‘இனி நான் தோ்தலில் போட்டியிடப் போவது இல்லை. இதுவரை நான் செய்து வந்த பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள கட்சியில் பல மூத்த தலைவா்கள் உருவாகியுள்ளனா். அவா்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வாா்கள்’ என்றாா்.
மேலும் இனி பாஜகவின் ராமா் - லட்சுமணாக எல்.கே. அத்வானி, பிரமோத் மகாஜன் (மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவாரான இவர் பின்னாளில் தனது சொந்த சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்) ஆகியோா் செயல்படுவாா்கள் என்று வாஜ்பாய் அறிவித்தாா்.
அவருக்குப் பின்னர் பாஜக தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டவர் அத்வானி. ஆனால் வாஜ்பாய்க்கு இருந்த மக்கள் செல்வாக்கு தனக்கு இல்லை என்பதை அத்வானி ஒருமுறை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டாா். ‘கட்சி வேண்டுமானால் என்னுடன் இருக்கலாம். ஆனால் மக்கள் வாஜ்பாய் பக்கம்தான் உள்ளனா்’ என்று அத்வானியே ஒருமுறை குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


