தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கர்நாடக வெள்ளத்துக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

கர்நாடக மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி முதல்வர் குமாரசாமி உறுதியளித்தார்.

News image

புகைப்படம்: ஏஎன்ஐ (கோப்புப்படம்)

Updated On :19 ஆகஸ்ட் 2018, 7:19 pm IST

கர்நாடக மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி முதல்வர் குமாரசாமி உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் குடகு, தக்ஷி்ன கன்னடா, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் ஷிவமோக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை அறிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருப்பதாவது,

"கர்நாடகத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து முதல்வர் குமாராசாமியிடம் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்திக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.