மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-க்கு, தில்லியில் அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவின் உயிராக வாஜ்பாய் விளங்கினார். இந்தியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தனது இளமைப் பருவத்திலேயே முடிவு செய்து விட்டார். இந்தியாவில் ஒரேயொரு கட்சியின் சாம்ராஜ்ஜியம் நிலைத்திருந்த வேளையில் தனது அரசியல் பயணத்தை துவக்கியவர். பல வருடங்கள் எதிர்கட்சியாக திறம்பட செயலாற்றியவர். தனது கொள்கையில் இருந்து எப்போதும், எந்த கடினமான நேரங்களிலும் விலகாதவர். அவர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர். நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மதித்தவர்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு வலுக்கும்போது எல்லாம் அதை திறம்பட எதிர்கொண்டவர் வாஜ்பாய். இவ்விவகாரத்தில் அவரின் சரியான நடவடிக்கைகளால் தான் பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களின் உண்மை முகம் வெளியே தெரிந்தது. அதுபோல உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு வலுக்க காரணமாக இருந்தவரும் வாஜ்பாய் தான்.
வாஜ்பாய் அவர்களின் தீவிர முயற்சியால் தான் சர்வதேச அரங்கில் இந்தியா அணுஆயுத வல்லமை பெற்ற நாடாக மாறியது. பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் இரு தினங்களின் இடைவேளையில் அடுத்தடுத்து ஆணுஆயுத சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது அவரது துணிவு மற்றும் தலைமையை வெளிக்காட்டுகிறது.
எந்த எதிர்ப்புகளுக்கும் அடிபணியாத காரணத்தால் தான் அவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



