ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கால்நடை திருடியதாக சந்தேகம்: உ.பி.யில் இளைஞர் அடித்துக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தின் போலாபூர் ஹதோலியா கிராமத்தில்  கால்நடை திருடியதாக சந்தேகப்பட்டு, உள்ளூர்வாசிகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தின் போலாபூர் ஹதோலியா கிராமத்தில்  கால்நடை திருடியதாக சந்தேகப்பட்டு, உள்ளூர்வாசிகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அபிநந்தன் சிங் கூறியதாவது:
துபை நாட்டில் தையல் பணிபுரியும் ஷாரூக்(20), விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார். அவரும், அவரது நண்பர்கள் மூவரும், புதன்கிழமை இரவு வெளியில் சென்றனர். இவர்களை பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர், கால்நடை திருடர்கள் என்று சந்தேகப்பட்டு அவர்களைத் தாக்கினர். 
இந்த சம்பவத்தில் ஷாரூக்குடன் வந்த மற்ற மூவரும் தப்பி ஓடி விட்டனர். மக்கள் அடித்ததில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
பிரேத பரிசோதனையில், அவர் இறப்புக்கு காரணம், கடுமையாக தாக்கியது தான் என்று தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.