

புது தில்லி: மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறையின் முக்கிய பொறுப்பான தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி வகித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் பதவி விலகினார்.
அதனையடுத்து கடந்த ஐந்து மாதங்களாக இந்தப் பதவி காலியாகி இருந்து வந்தது.
இந்நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற இந்தியன் பிசினெஸ் ஸ்கூலில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இந்த பதவியில் மூன்று ஆண்டு காலம் நீட்டிப்பார்
இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.