டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

கொலம்பியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 312 ஆக அதிகரிப்பு! 290 பேர் மாயம்!

கொலம்பியா நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

News image

கொலம்பியா நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 312 ஆக அதிகரிப்பு... - AP

Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:09 pm IST

கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது.

சோகோ மாகாணத்தில் அமைந்துள்ள சான் ஜோஸ் டெல் பால்மா் பகுதியில், கடந்த ஆக. 10 ஆம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், 30,000-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளின் மூலம், இதுவரை 312 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், மாயமான 290 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பேரிடரால் 4,611 பேர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இடிபாடுகளில் இருந்து 358 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொலம்பியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இதுவரை 220 டன் அளவிலான மனிதாபிமான உதவிகள் கொலம்பியாவுக்கு வந்துள்ளதாகவும், 114 சர்வதேச மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாகவும் கொலம்பிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கொலம்பியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு முதற்கட்டமாக 20 மெட்ரிக் டன் அளவிலான மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

death toll from the powerful earthquake in Colombia has risen to 312.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.