எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணையும் மகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இதுதொடர்பாக டிசம்பர் 10-ஆம் தேதி புதுதில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரை இதில் இணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு பேசி வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்த மகா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என தெரிவித்தனர். இதில் 7 மாநில முதல்வர்கள் மற்றும் 10 தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


