எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி: எட்டாவது நாளாக முடங்கிய பாராளுமன்றம் 

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியின் காரணமாக எட்டாவது நாளாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியது. 
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி: எட்டாவது நாளாக முடங்கிய பாராளுமன்றம் 
Published on
Updated on
1 min read

புது தில்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியின் காரணமாக எட்டாவது நாளாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியது. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. 

பாராளுமன்ற வளாகத்திலும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வெள்ளியன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகேதாட்டு  விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும்,  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையினை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் தொடர் அமளியில் காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் 27 ஆம் தேதிதான் பாராளுமன்றம் கூட உள்ளது. 

மாநிலங்களவையிலும் இதே போக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com