கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குக்கர் சின்னம் கோரும் வழக்கு: தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரி, டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக முதல்வர்,

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:48 pm

DIN

உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் கோரி, டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பிலும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக டிடிவி தினகரன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனுவை கடந்த மாதம் 24-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நடைபெறவுள்ளது. 
இந்நிலையில், அந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை பதில் அளித்துள்ளது. அதில், 'உள்ளாட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. புதிதாக கட்சி தொடங்கினால் அதைப் பதிவு செய்வதும், அதற்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதும் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், 'டிடிவி தினகரன் தனி அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதென்றால் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயரையும், சின்னத்தையும் ஒதுக்கித் தரும்படி கோர முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.