அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி: தப்பிக்க நினைத்து சாகசம்! 

லஞ்சம் வாங்கும் பொழுது பிடிபட்டதால், தப்பிக்க எண்ணி லஞ்சப் பணத்தை பெண் போலீஸ் அதிகாரிஒருவர் வாயில் போட்டு விழுங்கிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2018, 12:52 pm

DIN

மும்பை: லஞ்சம் வாங்கும் பொழுது பிடிபட்டதால், தப்பிக்க எண்ணி லஞ்சப் பணத்தை பெண் போலீஸ் அதிகாரிஒருவர் வாயில் போட்டு விழுங்கிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் கோலாபூர் மாவட்டத்தில் உள்ளது சந்த்காத் காவல் நிலையம். இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக தன்னுடைய நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டி  சந்த்காத் காவல் நிலையத்தை அணுகியுள்ளர்.அங்கு பணிபுரியும் திபாலி காட்கி என்னும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்,  சான்றிதழ் வழங்குவதற்காக அந்த இளைஞரிடம் ரூ. 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாய் தெரிகிறது.

அதற்கு ஒப்புக் கொண்ட இளைஞர் நேராக அங்கிருந்து கோலாபூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை அணுகியுள்ளார். அவர்களது ஆலோசனையின்படி ரசாயனப் பொருள் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் திபாலியை  சந்திக்கச் சென்றுள்ளார்.

திபாலி லஞ்ச பணத்தை பெறும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டனர். நிலைமையை உணர்ந்து அதிர்ந்த திபாலி, திடீரென்று தன கையில் வைத்திருந்த லஞ்சப்பணம் 300 ரூபாயை வாயில் திணித்து விழுங்க முயற்சித்துள்ளார்.

சுதாரித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றொரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உதவியுடன் விரைந்து செயல்பட்டு, திபாலி வாயைத் திறந்து பணத்தை மீட்டெடுத்துள்ளார்.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வாயிலிருந்து கைப்பற்றப்பட்ட பாதி கிழிந்த நிலையிலுள்ள ரூபாய் நோட்டுகள் ஆதாரமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.