அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ.800 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ரோட்டோமேக் நிறுவனத்தின் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டார்.
ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாதது தொடர்பாக சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, விக்ரம் கோத்தாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக, ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் தலைமறைவானதாக செய்தி வெளியானது.
இதனை மறுத்த கோத்தாரி, ரூ.800 கோடி விவகாரம் என்பது மோசடியல்ல. நான் எங்கும் ஓடிவிடவில்லை. நான் ஒரு இந்திய பிரஜை. என் நாட்டின் மீது பற்று கொண்டவன்.
நான் கடனை திருப்பிச் செலுத்தாதவன் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. என் நிறுவனத்தை லாபம் ஈட்டாத நிறுவனம் என்றே அறிவித்துள்ளன. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. நான் தொடர்ந்து வங்கிகளுடன் பேசி வருகிறேன். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். கடன்களை நிச்சயம் திருப்பி செலுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ரோட்டோமேக் நிறுவனம் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்ற எஃப்ஐஆர் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ. 3,695 கோடிக்கு ரோட்டோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி பெற்ற கடன் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
வங்கி வாரியாக ரோட்டோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி கடன் பெற்ற தொகையின் விவரம்:
- பேங்க் ஆஃப் இந்தியா - 754.77 கோடி
- பேங்க் ஆஃப் பரோடா - 456.63 கோடி
- இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி - 771.07 கோடி
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 458.95 கோடி
- அலகாபாத் வங்கி - 330.68 கோடி
- பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா - 49.82 கோடி
- ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் - 97.47 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


