மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் புதன்கிழமை அத்துமீறிப் பறந்ததால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

News image
Updated On :21 பிப்ரவரி 2018, 1:34 pm

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்படுகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் சிலரும் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், தற்போது வான்வெளி வழியாகவும் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் என்ற பகுதியின் அருகே புதன்கிழமை காலை 9:45 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி வட்டமிட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இரு நாடுகளின் புரிந்துணர்வுப்படி இருநாடுகளின் எல்லைப் பகுதியில் 10 கிலோ மீட்டர் வரையில் போர் விமானங்களும், ஒரு கிலோ மீட்டர் வரை ஹெலிகாப்டர்களும் பறக்க அனுமதி உண்டு. ஆனால் அதை மீறி தற்போது பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் இந்திய எல்லைப்பகுதியின் அருகில் 300 மீட்டர் வரை பறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.