இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்படுகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் சிலரும் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தற்போது வான்வெளி வழியாகவும் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் என்ற பகுதியின் அருகே புதன்கிழமை காலை 9:45 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி வட்டமிட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இரு நாடுகளின் புரிந்துணர்வுப்படி இருநாடுகளின் எல்லைப் பகுதியில் 10 கிலோ மீட்டர் வரையில் போர் விமானங்களும், ஒரு கிலோ மீட்டர் வரை ஹெலிகாப்டர்களும் பறக்க அனுமதி உண்டு. ஆனால் அதை மீறி தற்போது பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் இந்திய எல்லைப்பகுதியின் அருகில் 300 மீட்டர் வரை பறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


