இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
Updated on
1 min read


பூஞ்ச்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி வருகிறது. அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ராணுவம் இன்று தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளது. பாகிஸ்தானில் அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com