தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அசைவ உணவுக்குத் தனியான தட்டு எடுத்துக்குங்க: மாணவர்களை அதிர வைத்த ஐஐடி பாம்பே மின்னஞ்சல்! 

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தனியான தட்டு பயன்படுத்த வேண்டும் என்று ஐஐடி பாம்பேயின் விடுதி ஒன்றின் ஒருங்கிணைப்பாளர், மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள விவகாரம் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2018, 3:01 pm IST

மும்பை: அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தனியான தட்டு பயன்படுத்த வேண்டும் என்று ஐஐடி பாம்பேயின் விடுதி ஒன்றின் ஒருங்கிணைப்பாளர், மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள விவகாரம் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி பாம்பே கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு என பல்வேறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் விடுதி எண் 11-இல் தங்கியிருக்கும் சக மாணவர்களுக்கு, கடந்த 12-ஆம் தேதி அன்று விடுதி உணவக ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் மாணவர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்தான் தற்பொழுது மாணவர்களை கொதிக்க வைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் தனியான தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற புகார் எனக்கு நிறைய மாணவர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. எனவே இனி அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள், இரவு உணவின் பொழுது அவர்களுக்கு என்றே  வடிவமைக்கப்பட்டுள்ள 'ட்ரே' வடிவத்தில் அமைந்துள்ள தட்டுகளை மட்டும் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.  அவர்கள் பிரதான தட்டுகளை பயன்படுத்த வேண்டாம்.      

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  சைவ உணவினை முக்கியத்துவப்படுத்தி அதற்கு என முக்கிய தட்டு என்று கூறுவது வலதுசாரி ஹிந்துத்துவ சிந்தனைகளை புகுத்தும் முயற்சி என்று பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐஐடி பாம்பேயின் மாணவர் விவகாரங்களுக்கான பிரிவுத் தலைவர் சவும்யோ முகர்ஜி, 'எல்லா விடுதிகளிலும் சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு என்று தனித்தனியே தட்டுகள் உள்ளன. இது முன்பிருந்தே பின்பற்றப்படுவதுதான். இப்பொழுது இதற்காக எதற்கு தனியான மின்னஞ்சல் என்று புரியவில்லை. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அதைவிடவும் மோசமானது' என்று தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.