சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இரட்டை இலைச் சின்ன வழக்கு விசாரணை: ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தில்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

News image
Updated On :12 ஜூலை 2018, 1:18 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தில்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரட்டை இலைச் சின்னம் தொடா்பான வழக்கு தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடுகையில், ஆட்சியிலும், கட்சியிலும் எங்கள் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. இந்த பெரும்பான்மையின் முக்கியத்துவம் சாசிக் அலி வழக்கிலும், நரசிம்ம ராவுக்கும், என்டி திவாரிக்கும் இடையே ஏற்பட்ட பிளவின்போதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சின்னங்கள் தொடா்பான வழக்குகளில் தோ்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் தரப்புக்கு சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது என்றாா்.

இதைத் தொடா்ந்து வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னணி: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பா் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோா் சாா்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.