கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை - கேரள முதல்வர்

பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:16 pm

DIN

பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதம் பிரதமரைச் சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழுவுக்கு பல முறை அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை பிரதமரை சந்திப்பதற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவுக்கு அனுமதி கிடைத்தது. 

அதனாலேயே, கேரள பிரதிநிதிகள் குழுவை பிரதமர் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"இந்த சந்திப்பு பலனளிக்கும் வகையில் இல்லை. உணவு தானியங்கள் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். ஆனால் அதற்கு பிரதமர், எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார். 

பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலை குறித்து எதிர்பார்புடன் கேரளாவில் இருந்து புதன்கிழமை கிளம்பினோம். ஆனால், மத்திய அரசுக்கு அது போன்ற எந்தவொரு திட்டமும் இல்லை. 

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்த விவகாரத்தையும் அவரிடம் எழுப்பினோம். மத்திய குழுவை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அவர் அது நடக்கும் என்றார்.

ஹெச்என்எல் தொழிற்சாலை விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. அதற்கு, மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கேரள அரசிடம் அதற்கான பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மேலும் கோழிகோட்டில் விமானங்களை தரையிறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இப்படி பல விவகாரங்கள் குறித்து பிரதமர் முன்வைத்தோம். 

ஆனால், மொத்தத்தில் சாதகமான பதில்கள் ஏதும் பிரதமரிடம் இருந்து வரவில்லை" என்றார். 

இதையடுத்து, கேரள எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா கூறுகையில்,

"ஹெச்என்எல் தொழிற்சாலை விற்பனை விவகாரம் குறித்து நாங்கள் பேசியதற்கு கேரள அரசும் அதனை விலைக்கு எடுக்கலாம் என்று பதில் வந்தது. இந்த சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.