ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுலின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது: ப்ரியா வாரியர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2018, 5:58 am

DIN

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரை கட்டித்தழுவினார்.

பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவர் கண் சிமிட்டினார். நாடாளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான நடைமுறையின்போது பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் கட்டித்தழுவியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், கண் சிமிட்டலுக்கு பெயர்போன நடிகை ப்ரியா வாரியர் இதுகுறித்து கூறுகையில்,

நான் கல்லூரியில் இருந்து வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், நாடாளுன்றத்தில் கண் சிமிட்டியதை கண்டு ரசித்தேன். அது மிகவும் அழகாக இருந்தது. நான் ஒரு திரைப்படத்தில் அதைச் செய்த பிறகு எனக்கு சொந்தமான அந்த செய்கையை ராகுல் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.