ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வரவேற்றனர். ருவாண்டாவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொருளாதார நல்லுறவுக்கான செயலர் திருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ருவாண்டா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிகாலி சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.680 கோடி) கடனுதவி அளிக்கும் திட்டமும் அப்போது இறுதி செய்யப்படக்கூடும். அதேபோன்று வேளாண் மற்றும் பாசனத் திட்டங்களுக்காக 10 கோடி டாலர் கடனுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இது ஒரு புறமிருக்க, ருவாண்டா அரசின் வீட்டுக்கொரு பசு அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார் என்றார் அவர்.
இரண்டு நாள்கள் ருவாண்டாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, அதன் பின்னர் உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஷீ ஜின்பிங்கும் ருவாண்டாவில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மான் வேட்டை கதை! காலா ஹிரன் படத்தை எதிர்த்து சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
நியூசி. நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



