அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் நிலத்தடி நீர் மாசு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நிலத்தடி நீரில் அதிகமாக உலோக மாசு கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய

News image
Updated On :24 ஜூலை 2018, 1:23 am IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நிலத்தடி நீரில் அதிகமாக உலோக மாசு கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரின் தரத்தை கண்டறிவதற்காக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு நடத்தியது. அந்த தொழிற்பேட்டை பகுதியில் இருந்து பல நீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில், பெரும்பாலான நீர் மாதிரிகளில், வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உலோக மாசுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த நிலத்தடி நீரில், காட்மியம், குரோமியம், மாங்கனீசு, இரும்பு, ஆர்செனிக் போன்ற உலோகங்கள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. 
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரியை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவுகள், நிலத்தடி நீரில் இரும்பு, ஃபுளோரைடு, காட்மியம், நிக்கல் ஆகிய கனிமங்கள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன என்றார் அவர். 
தமிழகத்தில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டத்துக்குப் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.