12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் இனி ஆகப்போகுது 'பங்ளா': மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு காத்திருப்பு 

மேற்கு வங்கத்தை 'பங்ளா' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Published On :

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தை 'பங்ளா' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் முன்னெடுப்பில் மேற்கு வங்கத்தை 'பங்ளா' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம், அம்மாநில சட்டப்பேரவையில் வியாழனன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இனி அம்மாநிலம் 'பங்ளா'  என்றே அழைக்கப்படும்.    

மாநிலங்களின் பெயர்ப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்தினை முன்னுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த தீர்மானமானது மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.  

முன்னதாக 2011-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி அம்மாநிலத்தை 'பஸ்சிம் பங்கோ' என்று பெயர் மாற்றம் செய்ய எடுத்த முயற்சிகளும், பின்னர் பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனி பெயர்களில் அழைக்க எடுத்த முயற்சிகளும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.