புதுதில்லி: என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் திருமணம் செய்து கொள்ளப்படும் இந்தியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு,ம் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், கடந்த, 1969-ம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் குறித்து பெரும்பாலானோருக்கு பெரிய விழிப்புணர்வு இல்லை.
இந்நிலையில் என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் வியாழன் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது:
வெளிநாட்டில் பணிபுரியும் என்.ஆர்.ஐ கணவர்களால் இந்திய பெண்கள் கைவிடப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் என்.ஆர்.ஐக்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்), திருமணம் நடந்து முடிந்த 48 மணி நேரத்தில் அவர்களது திருமணத்தை அரசிடம் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது
அவ்வாறு அவர்கள் செய்ய தவறினால், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் 'லுக்-அவுட்' எனப்படும் கண்காணிப்பு நோட்டீசும் அனுப்பப்படும். இது குறித்து அனைத்து பதிவாளர்களுக்கும் முறைப்படி அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



