திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

என்.ஆர்.ஐ திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் முடக்கம்: மேனகா காந்தி 

என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 ஜூன் 2018, 7:36 am

DIN

புதுதில்லி: என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் திருமணம் செய்து கொள்ளப்படும் இந்தியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு,ம் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், கடந்த, 1969-ம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் குறித்து பெரும்பாலானோருக்கு பெரிய விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில் என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் வியாழன் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது:

வெளிநாட்டில் பணிபுரியும் என்.ஆர்.ஐ கணவர்களால் இந்திய பெண்கள் கைவிடப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் என்.ஆர்.ஐக்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்), திருமணம் நடந்து முடிந்த 48 மணி நேரத்தில் அவர்களது திருமணத்தை அரசிடம் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது

அவ்வாறு அவர்கள் செய்ய தவறினால், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் 'லுக்-அவுட்' எனப்படும் கண்காணிப்பு நோட்டீசும் அனுப்பப்படும். இது குறித்து அனைத்து பதிவாளர்களுக்கும் முறைப்படி அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.