ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: ராகுல்

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூன் 2018, 10:34 am

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.

பாஜக-வின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது.

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.