பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.
பாஜக-வின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது.
பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


