காணாமல் போன 11 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு: கேரள காவல்துறை விசாரணை

கேரளாவில் காணாமல் போன 11 பேரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க வாய்ப்புள்ளதாக கேரள காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
காணாமல் போன 11 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு: கேரள காவல்துறை விசாரணை
Updated on
1 min read

கேரளாவில் காணாமல் போன 11 பேரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க வாய்ப்புள்ளதாக கேரள காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து ஜூன் 15-ஆம் தேதி இரு வேறு குடும்பத்தில் இருந்து 11 பேர் திடீரென மாயமாகினர். இதில் சிறுவர்களும் அடங்கும்.

இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் எனவும், இதற்காக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டுக்கு பயணித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து சிலர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களும் அப்போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கக்கூடும் என்று கேரள காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com