தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சமூக பாதுகாப்பு திட்டங்களால் 50 கோடி பேர் பலன்: மோடி பெருமிதம்

இந்தியாவில் 50 கோடி பேர் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கீழ் இணைந்துள்ளதாகவும், இது 2014-ஐ காட்டிலும் 10 மடங்கு அதிகம் என்றும் பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2018, 7:26 am

DIN

பிரதமர் மோடி, பல சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலன் அடைந்தவர்களிடம் தனது நமோ செயலி மூலம் காணொலி காட்சியில் உரையாடினார். அதில், அவர் பேசியதாவது,

"பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 20 கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டு பலன் அடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் கீழ் அரசு ஆயுள் காப்பீடு திட்டத்தை கொண்டுள்ளது. அதில் 5.5 கோடி மக்களுக்கு மேல் பதிவு செய்து, கோடிக்கணக்கான ரூபாய்களை கோரியுள்ளனர்.     "

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்துக்கு 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் இணைந்துள்ளனர்.   

அரசு பாதுகாப்பு திட்டங்கள் மூலம் நிலையற்ற வாழ்வை சமாளிக்க அரசு குறைந்த கட்டணத் தொகையில் சமூகத்தின் அனைத்து தர மக்களின் பொருளாதார பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.  

பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தில் 3 அம்சங்களில் வலியுறுத்தியுள்ளோம். ஏழை மக்களுக்கு வங்கி கதவை திறக்க வேண்டும், சிறு தொழில் முனைவோருக்கும், வளரும் தொழில்முனைவோருக்கு மூலதனம் அமைத்துத் தர வேண்டும் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.  

நிறைய பெண்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நிதி சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பது மிக முக்கியம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.