2015 முதல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதலில் 29 வீரர்கள் பலி: மத்திய அரசு

கடந்த 2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2015 முதல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதலில் 29 வீரர்கள் பலி: மத்திய அரசு
Updated on
1 min read

புது தில்லி: கடந்த 2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள், பாதுகாப்பு நிலைகள் மீது நடத்தப்பட்ட 9 பயங்கரவாதத் தாக்குதல்களில், 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 2 பொதுமக்கள் பலியானதாகவும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரி எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com