கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்க உத்தரவு

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்க உத்தரவு
Updated on
1 min read


புது தில்லி: ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டால், சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த கோரிக்கையை விசாரித்த பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், சிறை விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், சிறை மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் சிறையில் இருக்கும் போது வெளியில் இருந்து உணவு வழங்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் முன்பு கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் விதித்த நீதிமன்றம், அவரை மார்ச் 24ம் தேதி வரை திகார் சிறையிலடைக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், 12 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com