கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செல்லாதது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது தெரியுமா? 

செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2018, 11:58 am

DIN

மும்பை: செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்பொழுது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

அதன்பின் பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிதாக அறிமுகமான ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி ரிசர்வ் வங்கிக்கு ஏறக்குறைய 99 சதவீதத்துக்கும் செல்லாத நோட்டுகள் வந்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இந்நிலையில் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் கோரி இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி நோட்டுகள் வங்கிக்குள் வந்துவிட்டன. இந்த நோட்டுக்கள் அனைத்தும் துல்லியமாக எண்ணப்படும் நவீன எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றது.

அவ்வாறு செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்காக மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட 59 எந்திரங்கள் பல்வேறு ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் வைக்கப்பட்டு அவ்வாறு எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எதையும் ரிசர்வ் வங்கி மறுசுழற்சி செய்யவில்லை. இந்த பணியானது  ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்து வருகிறது. .

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.