மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் சந்திப்பு: 3-ஆது அணி அமைக்க திட்டம்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். 

News image
Updated On :19 மார்ச் 2018, 2:56 pm

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் திங்கள்கிழமை சந்தித்தார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவ்விரு தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக இவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ள கருத்துக்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பான தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

நாங்கள் இருவரும் சந்தித்திருப்பதி ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கம் மட்டும்தான் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதுபோல பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறப்பான ஆட்சியைத் தர தவறிவிட்டன. எனவே இனிவரும் காலத்தில் மக்களாட்சி அமையும் என சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆண்டு விழா வருகிற ஏப்ரலில் கொண்டாடப்படவுள்ள வேளையில், 3-ஆவது அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தொடர்ந்து முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.