மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

ஈராக்கில் கடந்த 2014-ல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்கிழமைதெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2018, 6:58 am

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:

ஈராக்கில் உள்ள மொசூல் என்ற இடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு ஈராக் அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை வைத்தது.

முன்னதாக, 2017 ஜூலை மாதம் கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரமில்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும். எனவே அதுபோன்ற செயலை நான் செய்யமாட்டேன் என்றார். 

இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அந்த 39 இந்தியர்களும் இறுந்துவிட்டதாக தற்போது நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த 39 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அவர்கள் ஈராக்கின் மொசூல் என்ற இடத்தில் இருந்துள்ளனர். அந்த இடத்தைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இவர்கள் அனைவரையும் அப்போது கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.