ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அகிலேஷின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை தான் எங்கள் தோல்விக்கு காரணம்: மாயாவதி

அகிலேஷ் யாதவின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை தான் எங்கள் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என மாயாவதிகுற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :24 மார்ச் 2018, 3:06 pm

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களை பாஜக-வும் 1 இடத்தை சமாஜவாதி கட்சியும் கைப்பற்றின.

இந்நிலையில், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறையின் காரணமாகவே பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பீமாராவ் அம்பேத்கர் தோல்வியுற்றார். எங்களின் வேட்பாளரை சமாஜவாதி கட்சி இந்த தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் தங்களின் வேட்பாளருக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவிட்டனர்.

நான் மற்றும் அகிலேஷின் இடத்தில் இருந்திருந்தால் எனது சொந்த வேட்பாளரை விட கூட்டணி வேட்பாளருக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்திருப்பேன். இருந்தாலும் இந்த தேர்தலால் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை என்றார்.

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதில் இவர்கள் கூட்டணி வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இனி வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். ஏனெனில் 2019 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.