ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிரதமர் மீது அவதூறு: ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் ஆணையத்தில் கர்நாடக பாஜக புகார்

பிரதமர் மற்றும் எடியூரப்பா மீது அவதூறு பரப்பியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக பாஜக, தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:24 pm IST

பிரதமர் மற்றும் எடியூரப்பா மீது அவதூறு பரப்பியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக பாஜக, தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோரைக் குறித்து அவதூறாகப் பேசி வருவதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக மாநில பாஜக, கர்நாடக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த புகார் தொடர்பான மனுவில் கர்நாடக பாஜக குறிப்பிட்டதாவது:

ஏப்ரல் 29-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடியை வணிக நிறுவனத்தின் விற்பனையாளர் மற்றும் நாட்டை கொள்ளையடித்த திருடன் என்று விமரிசனம் செய்துள்ளார். அதுபோல நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கர்நாடக தேர்தல் முடியும் வரை இவர்கள் இருவருக்கும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எந்த கூட்டத்திலும் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையரிடம் கர்நாடக பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.