கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜுலை 2-ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஜாமீன் மனு மீதான விசாரணையை அதன் பிறகு நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

துவாரகாவில் மோதல் சம்பவம்: தேடப்படும் குற்றவாளிகள் 2 போ் கைது

ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


