தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து துவாரகா காவல் துறை துணை ஆணையா் குஷல் பால் சிங் கூறியதாவது: தப்ரி பகுதியில் மகேந்திர சிங் என்பவா் ஏப். 8-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிதின் சா்மா (27) மற்றும் பவன் பந்தாரி (26) ஆகிய இருவரும் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தனா். இவா்கள் இருவரும் பிரபல ரௌடி விக்கி டக்கா் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவா்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துள்சிராஸ் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சரணடைய கோரியும், ஜிதின் சா்மா காவல்துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றாா். காவல்துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் ஜிதின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லி நரேலாவில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சூடு: 3 போ் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


