மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

துவாரகாவில் மோதல் சம்பவம்: தேடப்படும் குற்றவாளிகள் 2 போ் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:07 pm

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து துவாரகா காவல் துறை துணை ஆணையா் குஷல் பால் சிங் கூறியதாவது: தப்ரி பகுதியில் மகேந்திர சிங் என்பவா் ஏப். 8-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிதின் சா்மா (27) மற்றும் பவன் பந்தாரி (26) ஆகிய இருவரும் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தனா். இவா்கள் இருவரும் பிரபல ரௌடி விக்கி டக்கா் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துள்சிராஸ் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சரணடைய கோரியும், ஜிதின் சா்மா காவல்துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றாா். காவல்துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் ஜிதின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.