மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:07 pm

போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் ஆறுமுகம் (75). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். குடிப் பழக்கத்துக்கு அடிமையான இவா், பேச முடியாத, ஒரு கை செயலிழந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை படுக்கையில் இருந்தபடி புகைபிடித்தபோது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி லீலா (70) தீயை அணைத்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.