கோடை காலம் எதிரொலியாக மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 21 லட்சம் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கோடை காலங்களில் வெயில் காரணமாக அதிகளவிலான வெப்பநிலை தெலங்கானா மாநிலத்தில் ஏற்படுவது வாடிக்கை. அதிலும் குறிப்பாக அம்மாநில தலைநகர் ஹைதராபாத்தில் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகும்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதும் கோடை காலம் காரணமாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 21 லட்சம் பீர் விற்பனையாகியுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுமார் 20 முதல் 21 லட்சம் பீர் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் 53 லட்சம் கேஸ் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 52 லட்சம் கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் பீர் விற்பனையாவது இதுவே முதன்முறையாகும்.
கடந்த 2015-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பீர் விற்பனை ஒவ்வொரு ஆண்டாக அதிகரித்து வருகிறது. மேலும் தெலங்கானாவில் அதிகளவில் விற்பனையாகும் மதுவகையில் பீர் முதலிடத்தில் உள்ளது. இன்னும் கோடை காலம் முடியாத சூழலில் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கேஸில் 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 12 பாட்டில் பீர் இருக்கும். இது மார்ச் மாதத்தில் மட்டும் 6.36 கோடி பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. கோடை காலங்களில் கலால் துறையின் மொத்த வருவாயில் 50 சதவீதம் பீர் விற்பனையில் இருந்து கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!

பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்பட இசையை காப்பியடித்த அனிருத்?
பாஜக தொண்டருக்கு பதவியைவிட நாடும் இளைஞர்களும்தான் முக்கியம்: அமித் ஷா
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



