திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் குமாரசாமி!

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசி வருகிறார்.

News image
Updated On :25 மே 2018, 2:26 pm IST

கர்நாடக சட்டப்பேரவையில் நீண்ட இழுபறிக்கு பிறகு குமாரசாமி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதலில் சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீரமானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார். 

அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 111 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

ஆனால், அவருக்கு காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மை தேவைக்கும் மேலான ஆதரவு உள்ளது. அதுமட்டுமின்றி, குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால் வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்பிருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.