முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரே நாளில் சிதம்பரம் 2-ஆவது முன் ஜாமீன் மனு - இந்த முறை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :30 மே 2018, 8:32 am

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) காலை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அவரை ஜூன் 5-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, அவர் தற்போது மீண்டும் முன் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் அடுத்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முறை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குக்காக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மே 31-ஆம் தேதிக்குள் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், ப.சிதம்பரம் இந்த முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சாதகமாக செயல்பட்டதாக அவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.