சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தொழில் போட்டியால் சில துறைகளில் நெருக்கடி அதிகரிப்பு:  அருண் ஜேட்லி

தொழில் போட்டி அதிகரித்துள்ளதால் இந்தியாவில் சில துறைகளில் நெருக்கடி அதிகம் உள்ளது; ஒரு நாடு பொருளாதாரரீதியாக வேகமாக வளரும்

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:07 am IST


தொழில் போட்டி அதிகரித்துள்ளதால் இந்தியாவில் சில துறைகளில் நெருக்கடி அதிகம் உள்ளது; ஒரு நாடு பொருளாதாரரீதியாக வேகமாக வளரும் காலகட்டத்தில் இதுபோன்ற சவால்கள் ஏற்படுவது சகஜமானதுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அண்மையில், தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால், பல நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து, விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 
தில்லியில் திங்கள்கிழமை இந்திய தொழில்போட்டி கண்காணிப்பு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அமைச்சர் ஜேட்லி பேசியதாவது: 
தொழிலில் தாங்கள்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது, தொழில் போட்டி ஏற்படுவது சகஜமானதுதான். இதுபோன்ற தொழில் போட்டி அதிகம் உள்ள துறைகளில் நெருக்கடிகளும் அதிகமாகவே இருக்கும். ஒரு நாடு பொருளாதார ரீதியாக வேகமாக வளரும்போது இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படுவது சகஜமானதுதான். 
அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவே, இந்திய தொழில்போட்டி கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போட்டி அதிகரிக்கும் நேரத்தில் இதுபோன்ற அமைப்புகளின் பணியும் மேம்படும்.
நமது நாட்டின் பொருளாதாரம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதே வேகத்தில் நாடு அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னேறும்போது, நாம் பல சாதனைகளைப் படைக்க முடியும். 
இந்தியாவில் இப்போது சேவைகள் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. 
அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் போட்டிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்த சிறப்பான அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற அமைப்புகளின் நோக்கம் அனைத்தும் நுகர்வோருக்கு சிறப்பான, தரமான சேவை மற்றும் பொருள்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது மட்டும்தான்.
நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும் முழுத்திறனுடன் செயல்பட்டு சந்தையில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே மத்திய அரசு விரும்புகிறது. 
அதே நேரத்தில் நுகர்வோர்களின் நலன்களைக் காப்பதும் மிகவும் முக்கியமானது என்றார் அருண் ஜேட்லி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.