அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புயலால் ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட்டுக்கு பாதிப்பில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

திட்டமிட்டப்படி நாளை மாலை ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி அளித்துள்ளார். 

News image
Updated On :13 நவம்பர் 2018, 6:31 am

DIN


திருப்பதி: திட்டமிட்டப்படி நாளை மாலை ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி அளித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் மண்டபத்தில் வேதபண்டிதர்கள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 - டி2 ராக்கெட், ஜிசாட்- 29 செயற்கைக்கோளுக்கு, காஜா புயலால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் திட்டமிட்டபடி நாளை மாலை 5.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் போது கஜா புயல் 400 கி.மீ. தொலைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், புயல் திசைமாறும் பட்சத்தில் ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்படும் என்று சிவன் கூறினார். 

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 - டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட். இதில் 3 நிலைகளில் எரிப்பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் மற்றும் மூன்றாவது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் திறன்கொண்டதாகவும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது. தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.