புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக எடுத்திருக்கும் அதிரடி வியூகம் பலனளிக்குமா?

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2018, 8:49 am


புது தில்லி: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் ஜுரத்தில் உள்ளன.

பொதுவாகவே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மோடிதான் ஹைலைட்டாக இருப்பார். ஒரே நாளில் 5 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட பங்கேற்பார். ஆனால் இந்த முறை அப்படி இருக்காதாம். அதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வெறும் 4 பேரணிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ராஜஸ்தானில் இன்னும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.

அதாவது, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் அமித் ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்தந்த மாநில பாஜக தலைவர்களையும் முன்னிலைப்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை தீவிரமாக முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.