பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக எடுத்திருக்கும் அதிரடி வியூகம் பலனளிக்குமா?

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST


புது தில்லி: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் ஜுரத்தில் உள்ளன.

பொதுவாகவே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மோடிதான் ஹைலைட்டாக இருப்பார். ஒரே நாளில் 5 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட பங்கேற்பார். ஆனால் இந்த முறை அப்படி இருக்காதாம். அதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வெறும் 4 பேரணிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ராஜஸ்தானில் இன்னும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.

அதாவது, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் அமித் ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்தந்த மாநில பாஜக தலைவர்களையும் முன்னிலைப்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை தீவிரமாக முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.