புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபை பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா? என்று சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா உரையை முன்வைத்து காங்கிரசின் சசி தரூர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார். அவரது இந்தப் பேச்சினை காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா. சபை பேச்சு ஒரு கட்சிப் பிரசாரத்திற்கான பேச்சு போன்று உள்ளது, இப்படிப் பேசிவிட்டு யாரும் தேசியக் கொடிக்கு பின்னார் ஒளிந்து கொள்ள முடியாது, அதேசமயம் ஐ.நா. சபையை அரசியலுக்கான தளமாக பயன்படுத்த முடியாது.
சுஷ்மா ஸ்வராஜ் தனது உரையில் பிரதமர் மோடியின் பெயரை 10 முறை குறிப்பிடுகிறார், ஆனால் இந்தியாவைப் பற்றி 5 முறை மட்டுமே குறிப்பிடுகிறார்.
சுஷ்மாவின் பேச்சின் முதல் பாதி முழுவதுமே பிரதமர் மோடியின் புதிய இந்தியாவிற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பார்வையை முன்வைத்தார். அதுவும் தூய்மை பாரதம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்துதான் பேசியுள்ளார். இது ஐக்கிய நாடுகள் சபை பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


