திஹார் சிறைக் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: 52 தமிழக போலீஸார் மீது சிபிஐ வழக்கு
திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.


திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.
தில்லியில் உள்ள திஹார் சிறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலவரம் ஏற்பட்டது. அப்போது காஷ்மீரைச் சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது தமிழக போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த சூழலில், சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியின் போது கைதிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக போலீஸாரும் திஹார் சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...