
நாக்பூர்: சமுதாய பிரிவினையைத் தூண்டும் வகையில் சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் இந்த ஆண்டுக்கான விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
மத்தியில் அரசாங்கங்கள் மாற்றியமைந்தாலும் நமது எல்லைகள் மீதான தாக்குதலை அண்டை நாடுகள் நிறுத்துவதில்லை.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழியிலான வழிபாட்டு முறைகளை எதிர்க்கிறது. அதேசமயம் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை ஏற்கிறது
விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.