காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டுமென பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்களான உம்மன் சாண்டி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம் திட்டத்தினை ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
முதலில், தன் கட்சிக்காரர்கள் மீதுள்ள குறைகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில், பாலின விகிதத்தை அதிகரிக்க உதவியுள்ள திட்டத்தை விமர்சிப்பதை ராகுல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சூரிய மின்தகடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சரிதா நாயர் அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

மாற்றத்துக்கான நேரம்

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

