தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் அருண் ஜேட்லி ராஜிநாமா செய்யவேண்டும் - ராகுல் காந்தி

மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 2:17 pm

மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதன்படி, 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மகள் மெஹூல் சோக்ஸியின் நிறுவனத்திற்காக பணியாற்றினார். இதற்கிடையே மெஹூல் சோக்ஸி நாட்டை விட்டு தப்பித்துச் செல்ல அருண் ஜேட்லி அனுமதித்துள்ளார். அருண் ஜேட்லியின் மகள் 12******16 எனும் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த செய்தியை ஊடகம் மறைத்துவிட்டது. ஆனால், மக்கள் இதனை மறக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ராஜிநாமா செய்யவேண்டும் என்றார்.   

முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,000 கோடி மோசடி வழக்கில் மெஹூல் சோக்ஸி இந்தியாவில் இருந்து தப்பியோடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.