பாதுகாப்புத் தடைகளை மீறி, கப்பலின் நுனிப் பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியின் விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு பயணிகள் கப்பலான ஆங்ரியாவில், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிய அம்ருதா பட்னவிஸ், கப்பலின் நுனிப் பகுதிக்குச் சென்று அமர்ந்து கொண்டு பல திசைகளில் செல்ஃபி எடுத்துத் தள்ளினார்.
இதில், அவருக்கு எந்த பதற்றமும் ஏற்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.
அவரை அதட்டி உள்ளே வரச் சொல்லவும் முடியாமல், கப்பலின் நுனிப் பகுதிக்குச் செல்லவும் முடியாமல் அவர்கள் திணறிய விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மாநில முதல்வரின் மனைவியே இவ்வாறு செல்ஃபி மோகத்தில் பாதுகாப்புத் தடைகளை உடைத்தெறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.