புது தில்லி: இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் எடுத்த முடிவில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படியானதே என்றும் இந்த வழக்கில் முன்றாவது நீதிபதியாகி நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பதினெட்டு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் பதினெட்டு தொகுதிகள் காலியாகி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இவ்வாறு தொகுதிகள் காலியாக இருப்பது அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி.
இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. யாரும் மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிய வந்து, இதுதான் இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



