கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிஐ முன்னாள் நிர்வாகத் தலைவரும், உறுப்பினருமான டி.எஸ். அஜித் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கேரள வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருள்களும், நிதியும் அளித்து வருகின்றனர். கேரள வெள்ளத்தில் வழக்குரைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது அலுவலகங்களில் வெள்ளநீர் புகுந்து சட்டப் புத்தகங்கள் உள்ளிட்டவை அழிந்துள்ளன. எனவே, கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ. 50 லட்சம் வழங்க பிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் உரிய ஆவணங்களை அளித்து பெற வழிவகை செய்யப்படும் என்றார் அவர். கேரள வெள்ள நிவாரணத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் ரூ. 39 லட்சம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


