ஒடிசாவில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் விரைவில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு

ஒடிசாவில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் விரைவில் பறக்கும் கேமரா உதவியோடு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் விரைவில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு
Updated on
1 min read


புவனஸ்வரம்: ஒடிசாவில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் விரைவில் பறக்கும் கேமரா உதவியோடு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

கோராபுட் மற்றும் மல்காங்கிரி மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் நடமாட்டங்களை ஒடிசா காவல்துறையினர் பறக்கும் கேமரா உதவியோடு கண்காணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த நிதியாண்டிலேயே சில பறக்கும் கேமராக்களை வாங்க உள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக, நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வார்கள் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com