அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆதார் தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி

இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 12:16 pm

DIN

இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார். 

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது. 

மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஆதாரை அதிகாரமிக்க முன்னேற்றத்துக்கான கருவியாகவே காங்கிரஸ் கட்சி பாவித்தது. ஆனால் பாஜக-வுக்கு ஆதார் என்பது தனி மனிதன் மீதான ஒடுக்குமுறை மற்றும் கண்காணிப்புக்கான கருவியாகவே பயன்படுத்தி வருகிறது.

எனவே இவ்விவகாரத்தில் இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.